மறைந்த தேமுதிக தலைவர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஈமச்சடங்கை, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாநில அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மொட்டை அடித்து கொண்டனர்.
அப்போது ஆற்றின் கரையோரத்தில் நடைபெற்ற ஈமச்சடங்கின் போது மூன்று கருடன்கள் வளம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கேப்டன் வாழ்க, கேப்டன் விஜயகாந்த் வாழ்க என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து மாநில அவை தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட மறைந்த விஜயகாந்தின் திருவுருவுச்சிலை திறந்து வைத்தனர். பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் சிலை நிறுவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக