பாரத பிரதமர் மோடி இளைஞர்சாதி, பெண்கள் சாதி விவசாயிகள் சாதி, ஏழைசாதி என்று 4 சாதியின் வளர்ச்சிக்காக ஆட்சி செய்து வருகிறது, ஆனால் மற்ற அரசியல் கட்சியினர் சாதியை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். மோடி என்றால் நம்பிக்கை, வளர்ச்சி, பிரதமராக பதவி ஏற்ற கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் வீடு, கழிப்பறை, குடிநீர் வசதிகள் அடிப்படை கட்டமபைப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் இந்தியாவின் முன்னேற்றம் என்ற இலக்கை கொண்டு செயல்படுகிறார். எனவே வரும் 2024 எம்.பி. தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்தின் முதன்மைத் மாவட்டமாக தர்மபுரி திகழும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நல திட்ட பிரிவு துணைத் தலைவர் சிவா, நகர தலைவர் கணேசன், தொகுதி பொறுப்பாளர் சங்கீதா, மாவட்ட மீனவர் அணி தலைவர் மாதையன், மாநில பொதுக்குழுஉறுப்பிணர் குணா, மேற்கு ஒன்றியதலைவர் சேட்டு உள்ளிட்ட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக