Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்ட பேருந்து நிலையம் - பயணிகள் அவதி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால்  பேருந்திற்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி  உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 


இதனால் சொற்ப அளவில் ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், பேருந்திற்காக அரசு பணிக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என 100க்கும் மேற்பட்ட பயணிகள் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகளில் ஓடி சென்று முந்தியடித்து கொண்டு ஏறுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் சிரமத்திற்க்கு ஆளாகி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies