மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்ரப்படி சுற்றுவட்டார பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஜனவரி, 2024

மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்ரப்படி சுற்றுவட்டார பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.வேட்ரப்பட்டி அண்ணல் நகர் கலைஞர் நகர் மோட்டூர் ராசலம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மொரப்பூர் அருகே உள்ள நடுப்பட்டி என்னும் இடத்தில் கடந்த 1991ம் வருடம் நிலம் ஒதுக்கப்பட்டது. 

அந்த நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை நிலத்தை  மீட்டு அண்ணல்நகர் மோட்டூர் ராசலம்பட்டி கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா தலைமையில்  மனு அளித்தனர்.


இதில்  மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி மொரப்பூர் ஒன்றிய செயலாளர் திருலோகன் தேவகலையழகன்  தீர்த்தான் ஜோதிநாதன் ஜெயக்குமார் ரமேஷ்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad