இக்கூட்டத்திற்க்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. செந்தில், மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம். பி.கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். இந்த மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பா.ம.க. நடத்திய மிக நீண்ட போராட்டம் மூலமாகவே கிடைத்தன. சாதி, மத இன பேதமின்றி அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காக நாம் போராடி வருகிறோம். டாக்டர் ராமதாஸ் அடிதட்டு மக்களை முன்னேற்றுவதற்காக சமூக நீதியை பெற்றுத்தர கடந்த 44 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார்.
சமூக நீதியை உறுதி செய்ய தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பொறுப்பு வகித்த முதல் - அமைச்சர்களை இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசி உள்ளார். தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நாட்ட வருகிற 2026 -ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைய வேண்டும். அதற்கு முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜவேல், மாவட்ட துணை செயலாளர் மாதையன், மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரகாஷ், தலைவர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில் துரை, சரவணன், குமார், குமரன், காரிமங்கலம் பேரூர் செயலாளர் சத்யா அசோக்குமார், மாதையன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சிலம்பரசன், சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேடி, நிர்வாகி மல்லசமுத்திரம் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக