பொங்கலை முன்னிட்டு விசிக நிர்வாகிகளுக்கு புத்தாடைகளை வாரி வழங்கிய தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தொண்டர்கள் நெகிழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜனவரி, 2024

பொங்கலை முன்னிட்டு விசிக நிர்வாகிகளுக்கு புத்தாடைகளை வாரி வழங்கிய தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தொண்டர்கள் நெகிழ்ச்சி.


தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு  பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் அரூர் பாபிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன இதில்  மாவட்ட பொறுப்பாளர்கள் அணிகளின் துணை நிலை பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் துணை  செயலாளர்கள் மகளிரணி பொறுப்பாளர்கள்  உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர்  இவர்களை கவுரவிக்கும் விதத்தில் புதியதாக பொறுப்பேற்று ஆறு மாதத்தில் நிர்வாகிகளை சந்தோசபடுத்தும் வகையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா மாவட்ட அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கினார்.


அனைவரையும் கைப்பேசி வழியே  தனித்தனியே அழைத்து மாவட்ட அலுவலகம் வரவழைத்து புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதன் முறையாக தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் விசிக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் வழங்கியது இதுவே முதல்முறை எனவும் நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா அவர்களுக்கு தங்களது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் வழங்கியதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 கருத்து:

JAYASANTH.VCK சொன்னது…

எழுச்சித்தமிழரின் அன்பு தம்பி சிகே சாக்கன் சர்மா அவர்கள் மகளிர் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடை வழங்கினார் என்பது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பல...

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.