பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதா,மாரியப்பன், முத்துமணி,ஆனந்தன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.
நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடுயின்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கூடுதலாக வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீர் விநியோகம் செய்தல், மத்திய ஜல்சக்தி திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் வழங்குதல், டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சாலர்கள், ஊராட்சி செயலாளர் முருகேசன், சஞ்ஜிவன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

