இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓன்றாக சேர்ந்து ஆண்மீக பயனமாக திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிச்த்து விட்டு வந்து கிராம தேவதைகளுக்கு பூஜை செய்வது வழக்கம். இந்த நடைமுறையானது இன்று வரை தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. அவ்வாறு ஆண்மீக பயணம் செல்லும் போது ஊரே காலியாகி வெறிச்சோடி காணப்படும், ஆனால் இந்த சமயத்தில் எவ்வித திருட்டும், அசம்பாவிதங்கள் நடைபெற்றதில்லை, அது சமயம் கிராம தேவதைகள் ஊரை காவல் காப்பதாக அக்கிராமத்தை சேர்ந்தவர் தெரிவிக்கின்றனர்.
இதையொட்டி இந்தாண்டு கிராம மக்கள் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்த ஆன்மிக பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைக்கப்பட்டு . அதில் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காணிக்கை செலுத்தி வந்துள்ளனர். அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் குடும்பம் குடும்பாக திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ராதாமாரியப்பன் தலைமையில், கிராமங்களை சுற்றிலும் மேளதாளங்கள் முழங்க உண்டியலை ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் 25 பேருந்து, டிராவல்ஸ், மற்றும் சொகுசு கார் என 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 3 ஆயிரம் பேர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றனர்.
திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் மீண்டும் கிராமத்திற்க்கு திரும்பி வந்து கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஊர் பூசாரிக்கு ஊர் மரியாதை செய்த பின்னர் அவரவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வார்கள். ஊரை காலி செய்து விட்டு பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்றதால் கிராமமே வெறிச்சோடி உள்ளது.
முதியோர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத சிலர் மட்டுமே தற்போது அந்த கிராமத்தில் உள்ளனர். ஊரே மொத்தமாக காலி செய்து திருப்பதி கோவிலுக்கு புறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக