Type Here to Get Search Results !

பாலக்கோடு பகுதியில் உள்ள ஏரிகளிலிருந்து இரவு பகலாக அதிகரித்துவரும் நெராம்பு மண் கடத்தல்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பொதுபணித்துறை ஏரிகளிலிருந்து  வருவாய்துறை அதிகாரிகளின் ஆசியுடன் இரவு பகலாக டிராக்டர் மற்றும் டிப்பர்களில்  நொரம்புமண் கடத்தல் வெகு ஜோராக  நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏரிகளில் இருந்து நெரம்புமண், ஆறுகளில் இருந்து  மணல் ஆகியவை கடத்தும் சமூக விரோதிகளுக்கு பாலக்கோடு வருவாய் துறை அதிகாரிகளின் ஆசி வழங்கி உள்ளதால் இரவு நேரங்களில் நொம்பு மண் மற்றும் மணல் தொடர் கொள்ளை நடைப்பெற்று வருகிறது.


இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகிறது, விரைவில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் தனிநபர்களின் வருமானத்திற்காக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகின்றனர்.


பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஏரிகளிலும் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரிகள் மூலம் மண், மணல் அள்ளப்பட்டு வருவது குறித்து விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பினால், நாங்கள் வருவாய் துறையினரின் அனுமதி பெற்றுதான்  மண்  அள்ளுகிறோம்  என கூறுகின்றனர். 


வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறி வருகின்றனர். வருவாய்த் துறை அதிகாரிகளின் ஆசியுடன் இரவு பகலாக மண் கடத்தப்பட்டு வருவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய கவனம் செலுத்தி இயற்கை வள கொள்ளையை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884