Type Here to Get Search Results !

கிட்டம்பட்டி கிராமத்தில் சிறுத்தை கடித்து 4 ஆடுகள் சாவு, அச்சத்தில் கிராம மக்கள்.


தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி  சிவராஜ் (வயது. 40) இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.


இன்று விடியற்காலை 4 மணி அளவில் ஆட்டுப் பட்டியில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது, அதனை தொடர்ந்து சிறுத்தையின் உறுமல் சத்தமும் கேட்டது, இதனால் வெளியே வர பயந்தவர் செல்போன் மூலம் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார், 10க்கும் மேற்பட்டோர் வருவதை கண்ட சிறுத்தை ஓட்டம் பிடித்தது, ஆட்டு பட்டியில் சென்று பார்த்த போது 4 ஆடுகளை சிறுத்தை  கடித்து கொன்றுள்ளது தெரிய வந்ததது, இது குறித்து சிவராஜ்  பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த வனதுறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் இறந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்து அருகில் குழி தோண்டி புதைத்தனர்.


மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884