Type Here to Get Search Results !

தர்மபுரி அரசு கலை கல்லூரியில் வேதியியல் துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.


தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறைக்கும் நாகப்பட்டினத்தில் உள்ள கலிலியோ வாசன் ஹாஃப் ஷோர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே முதன்முதலாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் முனைவர் ராமலட்சுமி அவர்கள் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. 

கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக வேதியியல் துறை தலைவர் முனைவர் ரா கிருபாகரன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார் நாகப்பட்டினம் கலிலியோ வாசன் ஆஃப் ஷோர் நிறுவனத்தின் மேலாண்  இயக்குனர் திரு சீனிவாசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வேதியியல் துறை மாணவர்கள் தொழில்துறை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பெற உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.


மேலும் பெட்ரோலியம் துறையில் வேதியியல் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விரிவுரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை பேராசிரியர்கள் முனைவர் மு வெண்ணிலா முனைவர் கா வெங்கடாசலம் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies