தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கோணங்கிஅள்ளி ஊராட்சி, பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பெருமாள், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, எர்ரபையனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமிமுனுசாமி, பாமக மாவட்ட பொறுப்பாளர் கோ.சின்னசாமி, நிர்வாகிகள் குழந்தைவேல், மணிவண்ணன், மாதையன், காளி, சின்னசாமி, சுப்ரமணி, மாது, வேடி, மாதேஷ், சக்தி மற்றும் இரு பால் ஆசிரியர்கள், மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்
.gif)

