தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் ஜனவரி 30 ம் தேதி ஜாக்டோ, ஜியோ சங்கம் சார்பில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற உள்ள போராட்டத்தில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொள்வது குறித்து மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமையில் ஆலோசனையில் ஈடுட்டனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)

