Type Here to Get Search Results !

தொப்பூர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 5 மணி அளவில் நெல் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி முன்னே சென்ற லாரி மீது மோதியது அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கார் மற்றும் மற்றொரு லாரி மோதியதில் முன்னே சென்ற ஒரு லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து முன் சென்ற காரில் ஏழு பேர் பயணம் செய்தனர். 

இந்த கார் லாரி அடியில் சிக்கி விபத்துக்குள்ளானது. அதிலிருந்து மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் பயணம் செய்த இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் அதே அதே இடத்தில் தீயில் கருகி இருந்துவிட்டார். இந்த விபத்தில் சிக்கிய ஏழு பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிக்சிக்காக சேர்க்கப்பட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்த உடன் நேரில் சென்று பார்வையிட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.கி. சாந்தி அவர்கள் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டீபன் ஜெசுபாதம் மற்றும் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில நேரில் சென்று ஆய்வு செய்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெறிச்சலை உடனடியாக சீர் செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறை துறையுடன் எல்என்டி நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies