பாலக்கோடு அருகே பூந்தோட்ட பள்ளத்தில் பனை கள் இறக்கிய மரம் ஏறும் தொழிலாளி கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

பாலக்கோடு அருகே பூந்தோட்ட பள்ளத்தில் பனை கள் இறக்கிய மரம் ஏறும் தொழிலாளி கைது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  பூந்தோட்ட பள்ளத்தில் பனை மரத்தில் அனுமதி இன்றி பனங்கள் இறக்குவதாக காலை பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்றனர்.


அப்போது பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை செய்ததில் மேட்டுர் அருகே ஆத்துக்கானூர் கிராமத்தை சேர்ந்த வையாபுரி (வயது.49) என்பதும், அனுமதி இன்றி சட்டவிரோதமாக பனை மரங்களில் இருந்து பனங்கள் இறக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 20 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad