Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு மொட்டையடித்து 11ம் நாள் காரியம் செய்த ரசிகர்கள்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில்  மறைந்த நடிகர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


அவர் உயிரிழந்த செய்தியை கேட்டு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் சென்னையில் அணி திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு  துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த் இறப்புக்கு துக்க நிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று விஜயகாந்த் இறந்து 11 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு  11ம் நாள் காரியம் செய்தனர். முன்னதாக விஜய்காந்த உருவ படத்திற்க்கு  மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மொட்டையடித்து கொண்டு யாகம் வளர்த்து காரியம் செய்தனர்.


மேலும் கேப்டன் வாழ்க வாழ்க என்று முழக்கத்துடன்  தங்களின் இரங்கலை வெளிபடுத்தினர். இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies