அதனைத் தொடர்ந்து இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட உள்ளது. எனவே 2023-2024-ஆம் ஆண்டிற்கான இவ்விருது பெற கீழ்கண்ட செயல்பாடுகளில் தமது பங்களிப்புடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் தகுதியான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனிநபர் உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
- சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி (Environmental Education and Training)
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (Environmental Awareness)
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection)
- அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் (Research and Scientific Studies)
- நிலையான வளர்ச்சி (Sustainable Development)
- திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management)
- நீர்பாதுகாப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு (Water Conservation and water bodies protection)
- காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு (Climate Change adaptation and Mitigation)
- மாசு குறைப்பு (Emission Reduction)
- நெகிழி பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் (Control and Recycling of Plastic Waste)
- சுற்றுச்சூழலை மறுசீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் (Eco- restoration, Conservation Measures)
- கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவைகள் (Coastal Area Protection etc.,)
- சுற்றுச்சூழல் தொடர்பான பிற திட்டங்கள் (Other Eco related Projects)
இவ்விருது பெற தகுதியான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனிநபர், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட விருதுக் குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன்-5ம் நாள் அன்று “தமிழ்நாடு பசுமை சாதனையாளர்” விருதும், ரூ1,00,000 ரொக்கப் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான, தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் 15.04.2024 வரை உள்ளது. மேலும் விண்ணப்பம் குறித்த தகவல்களுக்கு www.tnpcb.gov.in மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக https://dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனிநபர், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட தங்களின் செயல்பாட்டை உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் 15.04.2023-க்குள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதியமான் கோட்டை - ஓசூர் புறவழிச்சாலை, சோகத்தூர் அஞ்சல், ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், தருமபுரி வட்டம், தருமபுரி மாவட்டம் (தொலைப்பேசி எண் : 04342-270005) அவர்களிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக