Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மறைந்த தேமுதிக நரசிகர் விஜயகாந்த் மறைவுக்கு ஈம காரியம் செய்த ரசிகர்கள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதூரில் மறைந்த தேமுதிக நிறுவனரும், திரைப்பட நடிகருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 


அவர் உயிரிழந்த செய்தியை கேட்டு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் சென்னையில் அணி திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது   உடலுக்கு  துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


 இதன் ஒரு பகுதியாக  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தளவாய்அள்ளி புதூர் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று விஜயகாந்திற்க்கு ஈமச்சடங்கு காரியம் செய்தனர். அதில் விஜய்காந்த உருவ படத்திற்க்கு  மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஈம காரியத்தில் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுது தங்களது துக்கத்தினை வெளிப்படுத்தினர். மேலும் கேப்டன் வாழ்க வாழ்க என்று முழக்கத்துடன்  தங்களின் இரங்கலை வெளிபடுத்தினர். ஈமச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884