Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பின் 12 ஆம் ஆண்டு துவக்க விழா மாற்றுத்திறனாளி நண்பர்களுடன் கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு ஏழை மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பான முறையில் சேவை செய்து வரும் மை தருமபுரி அமைப்பு இந்த புத்தாண்டில் பனிரெண்டாம் ஆண்டு துவக்க விழா கண்டது. துவக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் ஐம்பது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், புத்தாடைகள், உணவு, இனிப்புகள் வழங்கி புத்தாண்டு தினம் மற்றும் மை தருமபுரி அமைப்பின் பனிரெண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது‌. 


இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த விருந்தினராக CKM ரமேஷ், சாய் கல்வி நிறுவனம் கோமலா, கட்டுமான தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கிருஷ்ணன், உலக பெண்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டார். அனைத்து நிகழ்ச்சியை மை தருமபுரி அமைப்பினர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், முஹம்மத் ஜாபர், விஜயகாந்த், சந்திரசேகர், விமலேஷ், ஹரீஷ், அம்பிகா, பிரேமா, அருள்மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies