Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சியில் ரூபாய் 79 ஆயிரத்திற்க்கு புளியமரம் மகசூல் பெறும் உரிமைக்கு ஏலம் விடப்பட்டது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் ஜெர்தலாவ் ஊராட்சி மன்றத்திலுள்ள திம்மம்பட்டி சாலை மற்றும் காரிமங்கலம் சாலை செல்லியம்மன் கோயில் வரை நெடுஞ்சாலை ஓரம் உள்ள புளிய மரங்களின் இந்த ஆண்டின் மகசூல் பெறும் உரிமைக்கான ஏலம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமாலா முன்னிலையிலும், ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் தலைமையிலும் நடைப்பெற்றது.

இதில் 79 ஆயிரம் ரூபாய்க்கு மாக்கன் கொட்டாயை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அதிக விலை கேட்டதை அடுத்து புளியமரம் மகசூல் உரிமை அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884