மாரண்ட அள்ளி அரசு மருத்துவமனை முன்பு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழற்கூடம் அமைக்கும் பணியை தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தொடங்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஜனவரி, 2024

மாரண்ட அள்ளி அரசு மருத்துவமனை முன்பு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழற்கூடம் அமைக்கும் பணியை தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.


தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பைபாஸ் சாலை அரசு மருத்துவமனை அருகே 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  மதிப்பீட்டில் நிழற்குடம் அமைக்கும் பணியினை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் நிழற் கூடம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார்.


மாரண்டஅள்ளி பைபாஸ் ரோடு அம்பேத்கர் காலனி அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் அவரது எம்.பி.  நிதியிலிருந்து 7இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  ரூபாய் ஒதுக்கீடு செய்து நிழற் கூடம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன்,செயல் அலுவலர் குமுதா, பொதுக்குழு உறுப்பினர் குட்டி(எ) மோகன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகாபன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் சுகந்தி ரமேஷ்,கார்த்திகேயன் யதிந்தர், மணிகண்டன், பன்னிர்செல்வம், ஆறுமுகம், ரமேஷ், ஸ்டார்பாய், ஜோதிவேல், பாலமுருகன், வைத்தீஸ்வரன், வசிம் மற்றும் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.


- பாலக்கோடு செய்தியாளர் வேலு.

கருத்துகள் இல்லை:

Post Top Ad