மேற்குறித்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள 12.01.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தங்கள் அணியினை பதிவு செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் 12.01.2024 - க்குள் பதிவு செய்யாத அணிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். மற்ற மாவட்ட வீரர்கள்/வீராங்கனைகள் அனுமதிக்கப்பட மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை கண்டிப்பாக போட்டி நடைபெறும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக