Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான எனது இலட்சியம் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பேச்சு போட்டி பெரியார் பல்கலைக்கழக  பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

50க்கும் மேற்ப்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.போட்டியின் நடுவர்களாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பிரசாத், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் ரத்தினம்மாள், சின்னபள்ளத்தூர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோர் இருந்தனர். 


பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் பல்கலைக்கழக  பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் மோகனசுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் ரியல் பவுன்டேசன் இயக்குநர் செந்தில் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies