Type Here to Get Search Results !

குத்தலஅள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மதுபாணம் விற்ற பெண் கைது, 3600 ரூபாய் மதிப்புள்ள 30 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது.


அதனை தொடர்ந்து   போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அடுத்த குத்தலஅள்ளி    கிராமத்தில் வீட்டில் வைத்து அரசு  மதுபானங்களை சட்டவிரோதமாக  விற்பனை செய்தது  தெரிய வந்தது.


அவரை பிடித்து விசாரித்ததில்  குத்தல அள்ளியை  சேர்ந்த பட்டம்மாள் (வயது. 58) என்பதும் அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்தது, அப்பெண்ணை கைது செய்த பாலக்கோடு   போலீசார் அவரிடமிருந்த  3ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள  30 குவாட்டர்  பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884