Type Here to Get Search Results !

விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிக சார்பில் இன்று ஏழாம் நாள் துக்க அனுசரிப்பு மௌன ஊர்வலம் நடைபெற்றது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வாரம் மறைந்தார் இதனை அடுத்து பென்னாகரம் தேமுதிக சார்பில் இன்று ஏழாம் நாள் துக்க அனுசரிப்பு மௌன ஊர்வலம் நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.


பென்னாகரம் தேமுதிக முன்னாள் நகர செயலாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான குமார் தலைமையில் பென்னாகரம் ராம்நாத் திரையரங்கம் முன்பிருந்து தொடங்கிய மௌன ஊர்வலம் போடூர் நான்கு ரோடு, காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், முள்ளுவாடி வழியாக பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு மௌன ஊர்வலமாக வந்தனர்.


பின்னர் பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாநில அவைத் தலைவர் மரு.இளங்கோவன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர், மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், அஇஅதிமுக பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு, பென்னாகரம் நகர செயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆ.ஜீவானந்தம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு மாற்று கட்சியினர்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


இந்த நிகழ்ச்சியில் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884