கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பிக்கும் பொருட்டு, தருமபுரியில் வருகின்ற 12.01.2024 அன்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஜனவரி, 2024

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பிக்கும் பொருட்டு, தருமபுரியில் வருகின்ற 12.01.2024 அன்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது.


6-வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் தொடர்பான விளம்பர வாகனம் 12.01.2024 அன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பிக்கும் பொருட்டு 12.01.2024 அன்று காலை 6.00 மணிக்கு 16 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாரத்தான் போட்டிகள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கப்படவுள்ளது. மாரத்தான் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கப்பட்டு, அரசு கலைக்கல்லூரி, தருமபுரி வரை நடைபெறும்.


மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 11.01.2024க்குள் மாவட்ட விளையாட்டரங்கில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad