Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் எம்.ஜி.ஆர் 107-வது பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக  நகர கழக செயலாளர் ராஜா தலைமையில்  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்  107-வது பிறந்தநாள் விழா  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேருந்து நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வென்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பட்டாசு வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புக்கள் மற்றும் அன்னதானம்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், மஒன்றிய செயலாளர் கோபால், முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட அக்ரோ தலைவர் சாம்ராஜ், முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, சுகர் மில் வீரமணி, நகர துணை செயலாளர் ஆறுமுகம் இணை செயலாளர் லட்சுமிகொளந்தை, முன்னாள் நகர  செயலாளர் சங்கர், முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன், கவுன்சிலர் விமலன், குருமணிநாதன் முன்னாள் கவுன்சிலர் திலகவதி ராஜா, அவைத்தலைவர், ரவி, முத்துஜா, சின்னசாமி, அர்மன்நவப், பாஷா, தலைவர் குட்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு கிரிநாத், புஷ்பராஜ், சோமேஷ், மோகன், விஷ்னு, கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், முன்னாள் நிர்வாகிகள், ஒன்றிய, நகர கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், அண்ணா தொழில் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள்,  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies