Type Here to Get Search Results !

ஆதரவற்ற இருவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்கள்.


தருமபுரி பச்சையம்மன் கோவில் அருகே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார், மேலும் அதேபோல் பென்னாகரம் மேம்பாலம் அருகே ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்துள்ளார், இரு உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்து போலீசார் விசாரித்ததில் இவர்களுக்கு உறவினர்கள் எவரும் இல்லை என தெரியவந்தது.

இறந்து மூன்று மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இவர்களது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் இன்று பி1 காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர் குமார் ஆகியோருடன் இணைந்து மை தருமபுரி தன்னார்வலர் அமைப்பின் அமரர் சேவை பிரிவின் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தி இரண்டு உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மை தருமபுரி தன்னார்வலர் அமைப்பின் அமரர் சேவை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, முஹம்மத் ஜாபர், அலெக்ஸாண்டர் மற்றும் சண்முகம் ஆகியோர் நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 73 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies