அவரை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் சொந்த கிராமத்தில் இருந்து இளைஞர் சென்றதாகவும், அந்தப் பெண்ணின் சொந்த கிராமத்திற்கு முன்பாகவே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுள்ளான் இறப்பிற்கு நீதி வேண்டி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கச்சேரிமேடு நான்கு முனை சந்திப்பில் சாலையில் உருண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதில் சென்னை திருவண்ணாமலை சேலம் பெங்களூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சுள்ளானின் தாய் மற்றும் உறவினர்கள் சாலையில் உருண்டு கதறி அழுத காட்சி பார்ப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. டிஎஸ்பி ஜெகநாதன் இன்ஸ்பெக்டர் பாஸகர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் கைவிடப்பட்டது.
.gif)

