Type Here to Get Search Results !

ஆதரவற்ற நபரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணன்டஹள்ளி நெடுஞ்சாலையில் சாலையோரமாக நடந்து சென்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார், அவரை பற்றி விசாரித்ததில் எந்த விபரமும் கிடைக்கவில்லை. இறந்தவரின் உடலை மத்தூர் காவல் நிலைய காவலர் செந்தில், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், அலெக்ஸாண்டர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 74 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884