Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு மறைந்த நடிகர் மற்றும் தே.மு.தி.க கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்க்கு அதிமுகவினர் அஞ்சலி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு மறைந்த நடிகர் மற்றும் தே.மு.தி.க கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்க்கு அதிமுக நகர செயலாளர் ராஜா தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  பாலக்கோடு எம். எல். ஏ. கே.பி.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு   பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். 


இந்நிகழ்ச்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன்,  ஒன்றிய, நகர, கிளை கழக தொண்டர்கள்  என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies