Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை அளவீடு செய்ய முயன்றதால் பரபரப்பு.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகில் வசித்து வருபவர் ரவி, இவரது தந்தை தங்கவேல் என்பவரின் பெயரில் இருந்த காலி மனையின் பட்டாவை இவருக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த சென்னம்மாள் முருகன் என்பவர் காலிமனையின்  பட்டாவை அவரது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.


இதுகுறித்து ரவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நடைப்பெற்று வரும் நிலையில், நேற்று செல்லம்மாள்,  வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை அளவீடு செய்ய முயன்றார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், வழக்கு முடியும் வரை நிலத்தை அளவீடு செய்ய கூடாது என்றும் மீறினால் குடும்பத்துடன் மண்ணெண்னெய் ஊற்றி கொண்டு  தீக்குளிப்பதாக தெரிவித்தனர்.


தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து நில அளவீடு செய்யும் பணியை நிறுத்தியதுடன், வழக்கு முடியும் வரை இரு தரப்பும் காலி மனையில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள கூடாது என கூறியதால் நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884