தருமபுரி உணவு வங்கியின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தருமபுரி உணவு வங்கியின் புதிய பொறுப்பாளர்களை 20 தன்னார்வ தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக தேர்வு செய்தனர்.
தலைவர்- திரு.எ. சரவணன் அவர்கள் (சீட்ஸ் தொண்டு நிறுவனம்) துணைத் தலைவர்களாக திருமதி. காசிமணி (பிபிடிசி தொண்டு நிறுவனம்), திருமதி. கலைவாணி (பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை), பொருளாளர் - திரு. சசிக்குமார் (கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன்), செயலாளர் - திரு வினோத், (இந்தியன் பில்லர்ஸ்), துணைச் செயலாளர் திரு. வி.வினோத் குமார் (பசியில்லா தருமபுரி), இணைச் செயலாளர், திரு. சிவக்குமார் (சிஆர்டிஎஸ்), சட்ட ஆலோசகர் திரு. பிரகாஷ் (வி ஃபார் யூ), மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ராம் (ரெடன்ஸி) உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு கோகுல், (பாட்டி வடை கடை) ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் தருமபுரி உணவு வங்கியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
.gif)

