தோட்டத்திற்க்கு செல்லும் வழியில் நாகராஜன் தலை, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு,இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார், இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மோப்ப நாய் மற்றும் தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்க்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் கொலை சம்பவம் குறித்து விரைந்து விசாரிக்க பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து தலைமையில் தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
இக்கொலைக்கு முன் விரோதம் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் இக்கொலையில் யார் ,யார் ஈடுபட்டுள்ளனர் எனவும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
.gif)

.jpg)