Type Here to Get Search Results !

பெரிய கோடியானஅள்ளி கிராமத்தில் வீடு எரிந்த விவசாயிக்கு, திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் நல திட்ட உதவிகள் வழங்கினார்.


ஜக்கசமுத்திரம் ஊராட்சி பெரிய கோடியானஅள்ளி கிராமத்தில் வீடு எரிந்த  விவசாயிக்கு, திமுக  மாவட்ட செயலாளர் பழனியப்பன்  நல திட்ட உதவிகள் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஊராட்சி பெரிய கோடியான அள்ளி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி மாதேஷ் (வயது 35) நேற்று முன்தினம் இரவு இவரது குடிசை  வீடு திடிரென தீ பற்றி எரிந்தது, உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் தீ மளமளவென பரவி குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது, அத்துடன் வீட்டில் இருந்த துணிமணிகள், உணவு தானியங்களும், குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள்,  நிலஆவணங்கள், தங்க நகை, ரொக்கப்பணம் உள்ளிட்ட 3 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட  பொருட்கள் தீயில் கருகின.


தகவலறிந்த தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விவசாயி மாதேஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு  ஆறுதல் கூறியதுடன் 10 ஆயிரம் ரூபாய் பணம், 50 கிலோ அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வீடு கட்டுவதற்க்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார்.


அது சமயம் திமுக மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி, மாவட்ட பொருளாளர் முருகன், விவசாய அணி மாநில துணைத் தலைவர்  சூடப்பட்டி சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளஅன்பழகன்,  எம்.வீ.டி.கோபால், நெசவளார் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies