கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் , அபராதம் மற்றும் கடை செயல்பட தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் காரிமங்கலம் ஒன்றியத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் யுயல் மூர்த்தி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தபோது காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகில் ஒரு மளிகை கடை, பஸ் நிலையத்தில் ஒரு பேன்சி வளையல் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதே போல் ஜிட்டாண்டள்ளியில் ஒரு மளிகை கடையிலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கடைகளை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பெயரில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இரண்டு கடைகளுக்கு தலா ஐயாயிரம் மற்றும் பத்தாயிரம் என மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு மாட்லாம்பட்டி மற்றும் பாலக்கோடு பகுதியில் இரண்டு கடைகளுக்கு நியமன அலுவலர் தலைமையில் கடைகள் மூடி நோட்டீஸ் வழங்கப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து குறிப்பிடத்தக்கது.
.gif)

