Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு கடைவீதியில் உள்ள ஸ்ரீ ஞானபிள்ளையார் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஞானபிள்ளையார் கோயிலில் கடந்த 11 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முதல் நாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம், இன்று மார்கழி மாதம் 12ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு  அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884