Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கணவனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மனைவி கீழே விழுந்து படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், அடுத்த பாப்பாரப்பட்டி அருகே கணவனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த மனைவி படுகாயம் அடைந்தார்.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மூக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி மனைவி மாது (35). இந்த நிலையில் மணி அவருடைய மனைவி மாது ஆகியோர்கள் மூக்கம்பட்டியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மாது மயக்கம் அடைந்து வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். 



இதில் மாது படுகாயம் அடைந்த நிலையில் பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 


இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884