Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி குண்டுபள்ளம் புளியந்தோப்பில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது, மதுபாட்டில்களுடன் மொபட் பறிமுதல்.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து   போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாரண்டஅள்ளி அடுத்த குண்டுபள்ளம் கிராமத்தில் உள்ள புளியமரத்தடியில் மொபட்டில் வைத்து  மதுபானங்களை விற்பனை செய்வது  தெரிய வந்தது, அவரை  பிடித்து விசாரித்ததில்   வெளாங்காடு கிராமத்தை சேர்ந்த பொன்முடி (வயது. 40 ) என்பதும்  அரசு மது பானங்களை மொபட்டில் எடுத்து சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்தது, அவரிடமிருந்து 4 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 31 குவாட்டர்  பாட்டில்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபட்டையும் பறிமுதல் செய்த அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் பொன்முடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies