தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட காவல்துறையும், உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை கண்காணித்து உரிய நடவடிக்கை சுகாதாரத் துறை செயலர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இணைந்த எட்டுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர் ஆய்வு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா தலைமையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் பாலக்கோடு அடுத்த காவாப்பட்டி புதுர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சரவணன் என்பவரின் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது காரிமங்கலம் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.
.gif)

