Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் இரண்டு புனித உடல்கள் நல்லடக்கம்.


தருமபுரி இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவாடி ரயில் நிலையம் அருகே 65 வயது நபர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இவரைப் பற்றி விசாரித்ததில் இவர் யார் என்ற விவரம் கிடைக்கவில்லை, இவரது உடல் தருமபுரி பச்சையம்மன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இதே போன்று தருமபுரி ரயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்ட சம்பவத்தில் உயிர் இழந்தார். இவரைப் பற்றி விசாரித்ததில் இவரது நண்பர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள், நண்பர்களின் உதவியுடன் தருமபுரி ரோட்டரி மின் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். 

தருமபுரி இருப்புப் பாதை காவலர் கோதண்டபாணி, உதயவாணன் ஆகியோர் முன்னிலையில் மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சமூக சேவகர் ஜாபர், சமூக சேவகி தென்றல் ஆகியோர் இரண்டு புனித உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 66 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies