Type Here to Get Search Results !

பாலக்கோடு ஒன்றியம் பி.செட்டிஅள்ளி கிராமசபை கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து தீர்மானம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி, எர்ரணஅள்ளி ஊராட்சி மற்றும் பி.செட்டி அள்ளி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமாரியப்பன், வளர்மதி சின்னவன், கணபதி ஆகியோர் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை  கட்டுப்படுத்துதல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு கொசு ஒழிப்பு ஆகியன குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இது குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றனர்.


இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம், நீர்வளத் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், கால்நடை மருத்துவர் நடராஜ், வட்டார வளர்ச்சி உதவிநிலை அலுவலர் முருகன், வார்டு கவுன்சாலர்கள், ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், சண்முகம், கோவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies