Type Here to Get Search Results !

காரிமங்கலம்‌ கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மொபட் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலி.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சொட்டான்டபட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது . 70) விவசாயியான  இவர் இன்று  காலை தனது மொபட்டில்  காரிமங்கலம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்தவழியே சென்ற லாரியின் பின் சக்கரம் லட்சுமணன் ஓட்டிச் சென்ற மொபட்  மீது ஏறியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


இது குறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies