சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்ட முகாம் அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு அனைத்து வணிகர் சங்க தலைவர் ஏ.வி.சின்னசாமி தலைமை வகித்தார், பொருலாளர் தீபக் வரவேற்றார், இதில் உதவி இயக்குநர் இரா.வாசுகி புள்ளிவிவர ஆய்வாளர் பூங்கோதை உதவி பொறியாளர் அ.கீதா ஆகியோர் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மத்திய மாநில அரசின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் மாநியத்துடன் வழங்கும் கடன்கள் பற்றி விளக்கினர்.
இந்நிகழ்ச்சியில் வணிகர்கள் சூர்யாவெங்கடேசன் லோகநாதன் தங்கராஜ் அலாவுதீன் ரகுராமன் ஆனந்த் சிவசந்திரன் மற்றும் அனைத்து கிளை சங்கங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

