Type Here to Get Search Results !

நடுப்பட்டி கிராமத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து சாவு .


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த போலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனியப்பன் (வயது .35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள்கள் உள்ளனர். இவர் தருமபுரி அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தில் உள்ள ரமேஷ் என்பவரின் விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணியில்  ஈடுபட்டிருந்தார்.

கிரேன் எந்திரம் மூலம் 65 அடி ஆழ கிணற்றில் இறங்கும் போது தவறி கிணற்றின் உள்ளே விழுந்தார். இதில் தலையில் பலத்த  காயம் ஏற்பட்டு முனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies