Type Here to Get Search Results !

அரூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா.


தருமபுரி மாவட்டம் அரூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 28.09.2023 முதல் 04.10.2023 வரை  நடைபெற்றது. முகாமினை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி பால் பெனடிக்ட் சேச, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு  தொடங்கி வைத்தனர். 

நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் இறுதி நாளான இன்று  பள்ளியின் பசுமையான சூழலை பாதுகாக்கும் பொருட்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பல்வேறு விதமான மரக்கன்றுகள் நட்டனர். இதில் பல்வேறு சிறப்பான வழிகாட்டுதல் வழங்கி, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies