Type Here to Get Search Results !

அரூர் அரசு.ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டுநலப்பணி திட்டம் நிறைவு விழா.


அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் சித்தேரி ஊராட்சியை தத்தெடுத்து தூய்மை பணியில் ஒருவாரகாலமாக ஈடுபட்டனர், இதன் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் பள்ளி நடைபெற்றது இந்நிகழ்விற்கு  தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்  திட்டஅலுவலர் கதிரேசன் இணை  திட்டஅலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்கள் இதில் பேரூராட்சி உறுப்பினர் உமாராணி முன்னாள் மாணவர்கள் சத்தியபிரகாஷ் உதவி தலைமை ஆசிரியர் கலைவாணன்  சக்திவேல்  செந்தில்குமரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies