Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே நல்லூர் கிராமத்தில் கேபிள் ஒயர் சரி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரகுபதி (வயது 50) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி உரிமையாளரிடம் கூலி வேலை செய்து வருகிறார், இன்று மாலை நல்லூர் கிராமத்தில்  வேப்பமரத்தில் சிக்கி கேபிள் ஒயர் அறுந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அதனை சரிசெய்ய ரகுபதி நல்லூர் சென்று வேப்ப மரத்தில் ஏறி கேபிள் ஒயரில் சிக்கி இருந்த ஊணம் கொடியை பிய்த்து தூக்கி வீசிய போது   அருகிலிருந்து மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் மரத்தில் இருந்து கீழே விழுந்து மூர்ச்சையானார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ரகுபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்தி மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனை சவ கிடங்கிற்க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies