Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே சொகுசு காருடன் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கடத்தி செல்லபட்ட சொகுசு கார் மீட்பு.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பூலாப்பட்டியில் நேற்று நள்ளிரவு  5 கிலோ தங்கத்துடன் சொகுசு காரை கடத்தி சென்றது குறித்து காரிமங்கலம் போலீசார் மற்றும் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், கடத்தி செல்லப் பட்ட சொகுசு கார் காரிமங்கலம் அடுத்த  கம்பைநல்லூர் அருகேவுள்ள கொல்லாபுரி அம்மன் கோவில் பகுதியில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

கார் இருந்த இடத்தி்னை கண்டுபிடித்து சென்ற தனிப்படை  போலீசார் சொகுசு காரை சோதனை செய்து பார்த்தபோது.. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எதுவும் காருக்குள் இல்லை என தெரியவந்திருக்கிறது, மேலும் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் கிருஷ்ணகிரி நாமக்கல் தருமபுரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies