Type Here to Get Search Results !

பாலக்கோ எம் ஜி ரோட்டில் அசைவ உணவகங்களில் சவர்மா சிக்கன் உணவு குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் திடிர் ஆய்வு.


நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சிக்கன் சாப்பிட்ட 13 வயது சிறுமி இறந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் பேரில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,


அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம்  பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ரோடு, தக்காளிமண்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்கள், துரித உணவகங்கள், தாபாக்கள் மற்றும் இறைச்சி கடைகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்  திடீர் ஆய்வு செய்தார். 


இதில் சுமார்  15க்கும் மேற்பட்ட உணவகங்களில் சமைத்த இறைச்சி, சமைக்காத இறைச்சி, கிரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், சில்லிசிக்கன், சில்லிமீன் மற்றும் கிரேவி, பிரியாணி உள்ளிட்ட துரித உணவுகள் , மயோனைஸ்,   நாள்பட்ட இறைச்சியும், குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி  மற்றும் செயற்கை நிறம் அதிகம் ஏற்றப்பட்ட இறைச்சி என 20 கிலோ அளவிலான இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 

 

தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies